சென்னை: ‘மாநிலம் முழுதும், 200க்கும் மேற்பட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்னும், நான்கு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், செந்தாமரை கண்ணன் அறிவிப்பு: தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றதால், தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில், அனேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும், லேசான மழை பெய்துள்ளது. மாநிலம் முழுதும், 200க்கும் மேற்பட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், வரும், 23ம் தேதி வரை மிதமான மழை தொடரும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *