இராசிபுரம்; டிச,16-

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்து தாண்டாகவுண்டம் பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி செயல் பட்டு வருகிறது.இங்குள்ள பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் வழக்கம் போல இன்று மதியம் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவிகள் இருவர் திடிரென மயங்கி விழுந்துள்ளனர்.இதனை தொடர்ந்து மயக்கம் அடைந்த பள்ளி மாணவிகளை மீட்டு பள்ளி தலைமை ஆசிரியர் மங்களபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.இதனை தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்ட பள்ளியில் மங்களபுரம் காவல் நிலைய காவல் துறையினர், மற்றும் சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மதிய உணவு சாப்பிட்டு மாணவிகள்மயங்கி விழுந்ததால் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் கூட்டமாக கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *