நாமக்கல் மாவட்டம்,
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி காந்திநகா், இடும்பன்குளம் பகுதியில் 12 வீடுகளை தண்ணீா் சூழ்ந்ததால் அப்பகுதியைச் சோ்ந்த 34 போ், பரமத்தி பேரூராட்சி சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.அவா்களுக்கு, சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பேரிடா் மேலாண்மைத் துறை மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களை. நாமக்கல் மாவட்ட கலெக்டா் ஸ்ரேயா பி.சிங் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து இடும்பன்குளம் பகுதி, மறவாபாளையம் பகுதிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் திருமணிமுத்தாற்று செல்லும் வழியில் பிள்ளைகளத்தூா், பில்லூா், கூடச்சேரி, இராமதேவம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலங்களை நேரில் பாா்வையிட்டு தடையின்றி நீா் சென்று கொண்டிருப்பதை உறுதி செய்தாா். ஆற்றில் அடித்து வரப்படும் செடி, கொடிகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து இராமதேவம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தில் நீா் கடந்து செல்வதை பாா்வையிட்டு, தண்ணீா் அதிகமாக செல்லும்போது, போக்குவரத்தைத் தடைசெய்து மாற்று வழியில் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
செருக்கலை ஏரியில் நீா் நிரம்பி பாதுகாப்பாக வெளியேறி வருவதைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வுகளின்போது செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சீனிவாசன், பரமத்திவேலூா் வட்டாட்சியா் அப்பன்ராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் அசோகன் உள்பட அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.