![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2021/11/IMG-20211128-WA0044-1024x763.jpg)
கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
நாமக்கல். நவ.28-
திருச்செங்கோடு வட்டம். எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகரம் கிராம நிர்வாக அலுவலர் கடந்த 15 தினங்களுக்கு மேலாக முறையாக அலுவலகம் வராமல் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார்
மேலும் வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூலம் கைது செய்யப்பட்டு புதிதாக வருவாய் ஆய்வாளர் நியமிக்காமல் இருப்பதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு நலத்திட்டங்கள் பெறுவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் சமீபகாலமாக விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் பெற கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்துப் பெற வேண்டிய நிலையில் மற்றும் இருப்பிடச் சான்று. வருமானச் சான்று. இறப்புச் சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பெறுவதில் பெரும் சிரமத்தை இப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் துவக்கி வைத்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி நிறைவுரை ஆற்றினார். கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ். ராஜீ. ரகமத்.சக்திவேல்.ஈஸ்வரன்.குப்புசாமி. மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குனர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர் இறுதியாக மூத்த தலைவர் பெரியசாமி நன்றியுரையாற்றினார். இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.