ஹிந்துக்களை குறிவைத்து படுகொலை செய்வதை தடுத்துநிறுத்திட மத்திய அரசை வலியுறுத்தி விஷ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் நாமக்கல் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தல் சார்பில் சமீப தினங்களாக அடிப்படை மதவாத பயங்கரவாதிகளால் காஷ்மீரில் ஹிந்துக்கள் குறிவைத்து படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும்,இந்த படு பாதகங்களையும், ஹிந்துக்கள் குறிவைத்து படுகொலை செய்வதை தடுத்து நிறுத்திடவும், மத்திய அரசை வலியுறுத்தியும், காஷ்மீர் பகுதி ஹிந்துக்களுக்கு பாரத தேசமே துணை நிற்கும் என்பதை தெரிவிக்கும் வகையிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நாமக்கல் மோகனூர் சாலை பி.எஸ்.என்.எல்.,அலுவலகம் அருகில் .கோட்ட செயலாளர் ஆர். யூ. ரகுபதி தலைமையில் நடைபெற்றது.மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்கி மத்திய அரசு ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென .வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர் . ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயளார் மகாதேவன்,மாவட்டபொருளாளர் ஹரீஸ், நாமக்கல் நகர செயலாளர் டி. என்.ஆர்.அருள்உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *