நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சியில் முன்னாள் பேரூர் கழக அவைத் தலைவருக்கு அஞ்சலி மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே ஆர் என் ராஜேஷ்குமார் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சியில் பட்டணம் பேரூர் கழக அவைத்தலைவர் சின்னான் ஆசாரி அவர்களின் நினைவஞ்சலி மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே. ஆர். என். ராஜேஷ்குமார், கலந்துகொண்டு சின்னான் ஆசாரி அவர்களின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் பட்டணம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியவர், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில், முன்னாள் திமுக எம்எல்ஏ.,வும், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான கே.பி.ராமசுவாமி, ராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் அட்மா குழு தலைவருமான ஜெகநாதன், பட்டணம் பேரூர் கழக செயலாளர் பொன்.நல்லதம்பி, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பட்டணம் பேரூர் கழக அவைத்தலைவர் சின்னான் ஆசாரி அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட
பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *