இராசிபுரம்:டிச,9-
பாரதிய ஜனதாக் கட்சி குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதில் வரலாறு காணாத அளவில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.அதனை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் பிஜேபி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஆயில் பட்டியை அடுத்த நாவல் பட்டி காட்டூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிஜேபி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இதில் பிஜேபி ஒன்றிய துணை தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் பாஸ்கர்,
ஒன்றிய பொதுச்செயலாளர் பிரகாசம், நாவல் பட்டி பஞ்சாயத்து ஒன்றிய கிளை தலைவர் முத்துவேல் , ஆறுமுகம், வெங்கடேஷ்மற்றும் ஒன்றிய துணை தலைவர்கள் செல்வகுமார், கண்ணன், மற்றும் ஒன்றிய செயலாளர் சூர்யா மற்றும் கட்சி உறுப்பினர் பழனிவேல்,ஓபிசி அணி செயலாளர் குமார் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/12/IMG_20221209_154034.jpg)