ஜூன் 14:

உயிர் காக்கும் ரத்த தானத்தின் மகத்துவத்தைச் சொல்லும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி ‘உலக ரத்த தானம் செய்வோர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

தானாக முன்வந்து ரத்த தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ரத்த தானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டு பிரசவ காலத்தில் ரத்த இழப்பால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கத்தில் ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது.

’18 வயது முதல் 65 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம்.

தானம் கொடுப்பவர், எடை 45 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 100 மி.லி.க்கு 12.5 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ரத்த அழுத்தம் இயல்பான நிலையில் இருக்க வேண்டும். அதாவது சிஸ்டாலிக் என்பது 160/100 என்றும் டயாசிஸ்டாலிக் என்பது 90/60-க்குள் இருக்க வேண்டும்.

ரத்தம் தானமாகப் பெறப்படுவதற்கு முன், இவை அனைத்தையும் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ளப்படும். மேலும் ரத்த வகை, ஆர்.எச். பிரிவு போன்ற பரிசோதனைகளும் செய்யப்பட்ட பின்னரே ரத்தம் எடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *