![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/06/IMG-20220620-WA0028.jpg)
திருச்செந்தூர்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு த முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது இந்நிலையில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவியாக திருச்செந்தூர் காஞ்சி சங்கர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் துர்கா என்னும் மாணவி பெற்றுள்ளார்.
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் செல்வ குமார் என்பவரின் மகள் துர்கா காஞ்சி சங்கர மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் தமிழ் மொழி மீது உள்ள ஆர்வம் காரணமாக தமிழை விரும்பி படித்ததாகவும் அதன் காரணமாகவே தமிழில் 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளதாகவும் மாணவி தெரிவித்தார்