யூகலிப்டஸ் மரம் கூடாது; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை ; ‘இனிமேல் யூகலிப்டஸ் மரங்களை நடக் கூடாது’ என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளை, அறிக்கையாக அரசு தரப்பு தாக்கல் செய்தது.

அதில், 10 ஆண்டுகளுக்குள், வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்கள் அகற்றப்படும். இதற்காக, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

அன்னிய மரங்களை அகற்றும் பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால், விரைவில் முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவு எடுத்துள்ள தமிழக அரசு, இனிமேல் யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை, ஆக.,16க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *