![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2021/12/download-6.jpeg)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 719 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 710 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை (இன்று) செவ்வாய்க்கிழமை (டிச.7) வெளியிட்டுள்ள அறிக்கையில்,புதிதாக 1,00,393 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 710 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,31,945-ஆக அதிகரித்துள்ளது.
ஒருநாளில் மட்டும் 10பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,549-ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து 731பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,87,414-ஆக அதிகரித்துள்ளது.