கடலூர் ஆணைகுப்பம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக கடலூர் புதுநகர் காவல் துறையினருக்கு தகவல் சென்றது.

கிடைத்த தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுநகர் காவல் துறையினர் இறந்த பெண்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இறந்த பெண்மணி யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் மேலும் இறந்த பெண்மணியின் முகத்தில் பலத்த காயம் இருப்பதால் பெண்ணை கொலை செய்து இப்பகுதியில் யாரேனும் போட்டார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூரில் எஸ்.பி அலுவலகம் பின்புறம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *