24.04.22

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் ஆரியூர்நாடு பஞ்சாயத்து தலைவர்
சி. நாகலிங்கம்
தலைமையில் மரக்கன்றுகள் நட்டு
தொடங்கப்பட்டன.

மேலும்
துணைதலைவர் சங்கீதா மகேந்திரன் வார்டு உறுப்பினர் குணசேகரன் முத்துசாமி மல்லிகா சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பஞ்சாயத்து தலைவர் சீ நாகலிங்கம் கூறியதாவது அங்கன்வாடி மையம் விரைவில் சீரமைத்து தரப்படும். என்று கூறியதாவது

மேலும் இக்கூட்டத்தில் கால்நடை மருத்துவர் ஆர் ராஜ்குமார். கூறியதாவது
ஒரு கறவை மாட்டிற்கு ரூபாய் 14 ஆயிரம் வீதம் இரண்டு மாட்டிற்கு 24ஆயிரம் ரூபாய் வரை தீவனம் செலவிற்கு இத்திட்டத்திற்கு கடன் அட்டை பயன்படுத்தலாம்.
மேலும் வட்டி வீதம் ஒரு மாதத்தில் வாங்கிய கடனை ஒரு மாதத்திற்குள் திருப்பி செலுத்தினால் வட்டி ஏதும் செலுத்த வேண்டாம்
என்று குறிப்பிடத்தக்கது.

மேலும்
வேளாண்மை உதவி அலுவலர் வீ.சி செல்லதுரை. கூறியதாவது கிஸான் அட்டை இல்லாத விவசாயிகல் விண்ணப்பங்களை
பூர்த்திசெய்து கொடுத்தால்
ஓரிரு நாட்களில் கிசான் அட்டை வழங்கப்படும்.

வனத்துறை அலுவலர் எஸ் தமிழ்வேந்தன். கூறியதாவது இங்கு வனத்துறையினரிடம் .
தேக்கு செண்பகமரம் நாவல் மரம் போன்ற நாற்றுக்கள் வனத் துறையினரிடம் சிட்டா அடங்கல் கொடுத்து மானியமாக
மரக் கன்றுகள் பெற்றுக் கொள்ளலாம்
இன்று குறிப்பிடத்தக்கது.

மேலும் மக்கள் கூறியதாவது
அரியூர்நாடு பஞ்சாயத்து நத்தக்காடு பட்டியில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைத்துத் தர வலியுறுத்தி வந்தனர்.

மேலும் அரசு வேலையில் இருப்பவர்கள் மட்டுமே எல்லா சலுகைகளும் எடுத்துச் செல்கின்றனர் என்று கூறி பொதுமக்கள் ஆவேசப் பட்டனர். பிறகு பஞ்சாயத்து தலைவர் எந்த உதவி வேண்டுமானாலும் நான் செய்ய காத்திருக்கிறேன் என்று அமைதிப்படுத்தினர்.
மேலும் தின்னனூர் நாடு
பஞ்சாயத்தில் தலைவர்
கே.
பி. ஜெகதீசன் தலைமையில் கிராம சபை கூட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *