இராசிபுரம்:செப்,12_

மங்களபுரத்தில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஒயின் ஷாப்…
குடிமகன்கள் அவதி..

நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து பகுதி உள்ளது. இங்கிருந்து வாழப்பாடி செல்லும் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது .இங்கு ஒரு நாளைக்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் மது வாங்க செல்கின்றனர் .இந்தநிலையில் தமிழகத்தில் சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது .இதனை அடுத்து மங்களபுரம் ஒயின் ஷாப் முன்பு இப்பகுதியில் பெய்யும் மழை நீர் குட்டை போல் சேரும் சகதியாக தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு மது வாங்க வரும் மது பிரியர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும், சேற்றில் கால் வைத்து நடப்பதற்கும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் போதையில் சில மது பிரியர்கள் இந்த சேற்றில் வழுக்கி விழுந்த சம்பவமும் நடந்துள்ளது. இந்த இடத்தில் மண் கொட்டி சீரமைக்க சொல்லி மது பிரியர்கள் பலமுறை மதுபான கடை ஊழியர்களிடம் கூறிய பொழுதும் அவர்கள் இது பற்றி கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே அரசு விரைந்துதலையிட்டு பிரச்சினை தீர்க்க வேண்டும் என மதுப்பிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *