இராசிபுரம்;செப்,12-
மங்களபுரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த டாஸ்மாக் நிர்வாகம்..

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராமத்தில் வாழப்பாடி செல்லும் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது.இதனை அடுத்து மங்களபுரம் ஒயின் ஷாப் முன்பு இப்பகுதியில் பெய்யும் மழை நீர் குட்டை போல் சேரும் சகதியாக தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு மது வாங்க வரும் மது பிரியர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும், சேற்றில் கால் வைத்து நடப்பதற்கும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.என செய்தி வெளியாகியுள்ளது.இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் இன்று சம்பந்தப்பட்ட பகுதியில் மண் மற்றும் கற்களை கொண்டு சரி செய்யும் பணி தொடங்கி உள்ளது.டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த உடனடி நடவடிக்கையை குடிமகன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் இந்த நடவடிக்கை எடுக்க காரணமாக தமிழக அரசுக்கு குடிமகன்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *