இராசிபுரம்;செப்,13-

சிங்கிலியன் கோம்பை பள்ளி மாணவி செஸ் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட திம்ம நாயக்கன்பட்டி அடுத்து சிங்கிலியன் கோம்பை உள்ளது .இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த நிலையில் இந்த பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி அக்சயா மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். 2023- 24 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான சதுரங்க போட்டியில் பள்ளி மாணவி மு .அட்சயா முதலிடம் பெற்று சிறப்பு செய்துள்ளார். வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 14 வயதுக்குட்பட்ட கபடி மற்றும் இறகு பந்து போட்டியில் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் வீ. கவியரசி என்னும் மாணவி சென்னையில் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் தகைசால் பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். பெருமைமிகு மாணவிகள் அடுத்த நிலையில் வெற்றி பெற பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.இந்த விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஏ.பாண்டியன் முன்னிலை வகித்தார். மேலும் இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரகுநாத் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *