இராசிபுரம்;நவ,21-
சிறந்த கூட்டுறவு சங்கமாக மங்களபுரம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது..
தமிழகம் முழுவதும் நவம்பர் 20 ம் தேதி 70 வது கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது.
அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் கோஸ்டல் ரெசிடென்சியில் கூட்டுறவு வார விழா நடைபெற்றது.இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த கூட்டுறவு சங்கத்திற்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.இதில் மங்களபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சிறந்த கூட்டுறவு சங்கமாக தேர்வு செய்ய பட்டு கேடயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி உமா, வனத்துறை அமைச்சர் திரு.மதிவேந்தன்,மாநிலங்கவை உறுப்பினர் ராஜேஷ்குமார், சட்ட மன்ற உறுப்பினர்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் மற்றும் கூட்டுறவு பதிவாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மங்களபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் பட்டாளி மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பொன் முருகேசன், மங்களபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ரங்கதுரை, மற்றும் பணியாளர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்…
![](https://vidiyalainokki.com/wp-content/uploads/2023/11/IMG-20231120-WA0011-1024x460.jpg)