இராசிபுரம் டிச,28-

நீர் வளம், நிலம் மற்றும் காற்றை மாசுபடுத்தி வரும் தனியார் ஆலையை நிரந்தரமாக மூட பொதுமக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சந்தோஷ் லிமிடெட் என்ற தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிட்டு வலியுறுத்தி மங்களபுரம் ஊர்கவுண்டர் K.ராஜா தலைமையில் 500-க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் ஆலை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் …

கடந்த 30 ஆண்டுகளாக நீர் வளத்தையும் நில வளத்தையும் மாசு படுத்தி வருவதோடு சுவாசிக்கும் காற்றையும் நஞ்சாகி வரும் தனியார் தொழிற்சாலையின் சட்டவிரோத விதி மீறல்கள், அரசு நில ஆக்கிரமிப்பு போன்ற செயல்களையும் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தப்பட்டது.

இதில் மங்களகரம் பகுதியை சேர்ந்த ஊர் கவுண்டர்கள்,மிராசுதாரர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *