![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/12/IMG-20221229-WA0084.jpg)
இராசிபுரம்:டிச,29_
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் திமுக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகிற 31.12.2022 மாலை 5மணி அளவில் இராசிபுரம் புதிய பேருந்து நிறுத்தத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.எனவே இதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் டி.சிவக்குமார் வழிகாட்டுதலின் படி மங்களபுரம், நாவல் பட்டி காட்டூர், தாண்டாகவுண்டம் பாளையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று கட்சி நிர்வாகிகள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் பிஜேபி நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய துணை தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் எம்.ஜி.சூர்யா, இளைஞர் அணி ஒன்றிய துணை தலைவர் பிரகாசம்,செயற்குழு உறுப்பினர் எம்.ஜி.பூபதி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.