இராசிபுரம்:டிச,29-
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் திமுக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகிற 31.12.2022 மாலை 5மணி அளவில் இராசிபுரம் புதிய பேருந்து நிறுத்தத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.எனவே இதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் பிஜேபி கட்சி மற்றும் விவசாய அணி சார்பில் அதன் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் பிஜேபி கட்சியின் விவசாய அணிபொதுச் செயலாளர் கோவிந்தராஜ் , விவசாய அணி ஒன்றிய தலைவர் க.செல்வம் , துணை தலைவர் பிரபு, ஒன்றிய செயலாளர் எஸ்.சத்தியகாந்தி, கட்சிஒன்றிய செயலாளர் எம்.ஜி.சூர்யா , மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *