மெர்சி கிராம் முன்னேற்ற சங்கம் மத்திய அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரம் துறையின் கீழான இயங்கும் மாற்று திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் NIEPWD இணைந்து மாற்று திறனாளிகள் குறித்து பழங்குடி மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் நாகலூர் பஞ்சாயத்து அரசு மாதிரி உயர்நிலை பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு 26.02.2022 அன்று நடைபெற்றது.இதில் நாகலூர் பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். மெர்சி கிராம முன்னேற்ற சங்க செயலாளர் திருமதி சியாமளா ,
NIEPMD சார்பாக பேராசிரியர் திரு.கோவிந்தராஜ் அவர்கள் கலந்து கொண்டு NIEPMD சேவைகள், அரசு சலுகைகள், மாற்று திறனாளிகளின் வகைகள், குறித்து விளக்கம் அளித்தார்.பழங்குடி மக்களுக்கான மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சட்டங்கள் குறித்து வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் திரு.முருகேசன் அவர்கள் விளக்கம் அளித்தார். மாற்றுதிறனாளிக்கான மாணவர்களின் சமூக பொறுப்பு குறித்து தரு. மணிமாறன் அவர்கள் எடுத்து கூறினார்.மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது .இதில்50 மாணவர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *