![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2021/12/IMG-20211218-WA0025-1024x768.jpg)
குப்பையோடு குப்பையாக ராஜா வாய்க்காலில் கொட்டப்பட்ட நோயாளிகளின் மருத்துவ கழிவுகள்
நாமக்கல் மாவட்டம்,பரமத்திவேலூர் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் சுகாதாரத் துறையின் விதிமுறைப்படி முறையாக அப்புறப்படுத்தப்படாமல் கோட்டைமேடு ராஜா வாய்க்கால் கரையோரப் பகுதியில் குவியல் குவியலாக கொட்டி வருகின்றனர் . கரைகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் சரிந்து பாசன வாய்க்காலில் உட்புறம் விழுகின்றன. இதனால் தண்ணீர் தடைபடுவது மட்டுமல்லாமல் ,விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.