பள்ளிப்பாளையத்தில் வட கிழக்கு பருவ மழை வெள்ள போலி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

நவம்பர் 10

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இதன் தொடர்ச்சியாக சேலத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இன்று 20 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ள நிலையில் காவிரிக் கரையோரப் பகுதிகளான பவானி, குமாரபாளையம், பள்ளிபாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் கால மீட்பு துறையினர் செய்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியார் நகர் படித்துறையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ள அபாய எச்சரிக்கை யாக தாழ்வான பகுதியில் உள்ள மக்களுக்கு போலி ஒத்திகை பயிற்சி தத்ரூபமாக ஏடிஎஸ்பி மணிமாறன் மற்றும் டிஎஸ்பி சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் பா.சிவக்குமார் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது முதலுதவி அளிப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் கூடியிருந்த பொதுமக்களிடம் தத்துரூபமாக செயல்முறை விளக்கத்தின் மூலமாக செய்து காட்டப்பட்டது. முன்னதாக பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி அவர்கள் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *