இராசிபுரம் பகுதி15 ஆண்டுகளாக மின்வசதி – குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி.. விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த தாண்டாகவுண்டம் பாளையம் உள்ளது.இங்கு அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.இங்கு கடந்த 15 ஆண்டுகளாக நீடிக்கும் குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் என்று சன் நீயூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.இதை தொடர்ந்து இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடிநீர் மற்றும் மின்சாரம் வசதி இன்று தருவதற்கு துரிதமாக செயல்பட்டு உள்ளனர்.இது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்ப்பை பெற்று உள்ளது.