இராசிபுரம்;பிப் 23-
மங்களபுரத்தில் புதியதேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராம பஞ்சாயத்து உள்ளது .இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வந்தது. தற்போது புதிய தேரானது இன்று வெள்ளோட்ட விழாவாக நடைபெற்றது.தொடர்ந்து புதிய தேருக்கு கலாசாபிசேகம் நடைபெற்றது.மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர், மிராசுதார்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.