![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/05/IMG-20220511-WA0040.jpg)
இராசிபுரம்;மே,11-
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் தனியார் பேருந்தை சிறைபிடித்து இன்று காலை 8 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில் இருந்து கீழே விழுந்த 9-ம் வகுப்பு மாணவி நேற்று காயம் அடைந்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மங்களபுரம் காவல் துறையினர் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.எனவே பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனர்.இதனால் சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது..