இராசிபுரம்: செப்,17_

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற பல போராட்டங்கள் நடைபெற்றது. எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணங்களால் 12-09-2022, திங்கட்கிழமை அப்பகுதி மக்களை அழைத்து கொண்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் அவர்களின் தலைமையில், நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் இரா. கபிலன், மாவட்ட துணை செயலாளர் ஆ.நீலவானத்து நிலவன், இராசிபுரம் தொகுதி செயலாளர் பெ.செங்குட்டுவன்ஆகியோர் முன்னிலையில் நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஊர் பொது மக்களை காவல்துறை மற்றும் அதிகாரிகள் அழைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் கலையரசன் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி கழிவுநீரை அகற்றுவதற்கு ரூபாய் 25 லட்சம் செலவில் திட்டம் ஒன்றை வகுத்து அதை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தனர். பொதுமக்கள் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் ஏற்றுக் கொண்டதின் அடிப்படையில் போராட்டம் நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *