இராசிபுரம்; ஜீன்,21-

இராசிபுரம் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
யோகா கலை என்பது இந்திய நாட்டின் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் யோகா கலையில் இந்தியா சிறப்பிடம் வகிக்கிறது. இன்று இந்தியா முழுவதும் தேசிய யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் தேசிய யோகா தினம் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதனை அடுத்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட பிலிப்பாக்குட்டையில் ஸ்ரீ ராம் விநாயகா சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய யோகா தினத்தை முன்னிட்டு யோக நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் இந்த நிகழ்ச்சியானது ஞானோதயம் யோகா நவயுக கல்வி அறக்கட்டளை மங்களபுரம் கிளைசார்பில் நடத்தப்பட்டது.இந்த யோக நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் அனைத்து வகையான யோகாவையும் பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு செய்து காட்டினார்.தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள்,பெற்றோர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *