இராசிபுரம்; ஜுன்,26-

மங்களபுரத்தில்ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது எனபொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இங்குள்ள 1 வந்து வார்டு பகுதியில் வடக்கு பகுதி உள்ளது.
இப்பகுதியில் உள்ள ஆற்றில் இங்குள்ள தனியார் தொழிற்சாலையின் கழிவுநீர் கலந்து வருகிறது.தற்போது தொழிற்சாலை பிரச்சினை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து தற்போது மங்களபுரம் பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் மற்றும் இந்திரா நகர் கழிவு நீர் இந்த வடக்கு பகுதியில் உள்ள ஆற்றில் கலக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதனை அடுத்து இப்பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய நிலங்களில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
ஆற்றில் கழிவு நீர் கலந்தால்இப்பகுதியில் மண் வளம் கெடுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. மேலும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் அதற்கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மங்களபுரம் பஞ்சாயத்து தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்றுக் கொண்ட பஞ்சாயத்து தலைவர் அரசு அதிகாரிகள் உடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *