இராசிபுரம்;செப்,27-
ஆயில் பட்டி அருகே தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடிப்பிடித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பதவிக்குட்பட்ட ஆயில் பட்டி உள்ளது . இங்கிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில்காட்டூர் பிரிவு ரோடு பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் இந்த பேருந்து நிறுத்தத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நின்று சொல்வதில்லை என பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர் .இந்த நிலையில் இன்று காலை ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் தனியார் பேருந்தைஇந்த பகுதி பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிறை பிடித்தனர் .தகவல் அறிந்த ஆயில்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .அதன் பிறகு இனி இந்த பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் செல்லும் என உறுதி அளிக்கப்பட்டது .அதன் பிறகு பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் அங்கிருந்து சென்றனர் .இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2023/09/IMG-20230927-WA0093.jpg)