பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி முடிதிருத்தும் தொழிலாளி பலி

நவம்பர் 22

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன்சந்தை பகுதி அருகே உள்ள ம காவிரி ஆற்றங்கரை ஓரம் மயான பகுதி அருகே இறந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் வரவே, அங்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த அசோக்குமார் வயது 28 என்பதும் இவர் ஒட்டமெத்தை பகுதியில் முடி திருத்தும் தொழிலாளியாக பணிபுரிந்து பணிபுரிந்து வருகிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று மாலை நேரத்தில் ஆற்றில் குளிக்க வந்த அசோக்குமார் மது போதையில் இருந்ததாகவும் ஒரு காரணமாக ஆற்று நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் முதல்கட்ட தகவலாக வெளிவந்துள்ளது. அசோக் குமார் அவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ச்சியாக பள்ளிபாளையம் காவேரி ஆற்றில் உயிர்பலி நிகழ்வது பள்ளிகளில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *