பள்ளிபாளையத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நவம்பர் 27

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட காந்திபுரம் 2-வது வீதி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் அடங்கிய தொகுப்பு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளிபாளையம் நகர திமுக செயலாளர் அ.ரவிச்சந்திரன் திமுக நாமக்கல் மாவட்ட பொருளாளர் அ.குமார், வர்த்தக அணி பிரிவு பிக்மெண்ட் முருகன், அவைத்தலைவர் குலோப்ஜான், திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார் துணை இளைஞரணி அமைப்பாளர் செல்வராஜ் தொழில்நுட்ப பிரிவு பெரியசாமி மற்றும் திமுக முன்னணி உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, தக்காளி, கத்தரிக்காய், உள்ளிட்ட காய்கறிகள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும் பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்விற்கு நகர திமுக பிரமுகர் கோல்டு பெல் என்கின்ற தங்கமணி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *