![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/04/IMG-20220412-WA0035.jpg)
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதற்கான அனைத்து ஆய்வு பணிகள் முடிவுற்று தற்போது பணிகள் துவக்கப்பட்டுள்ளன…. இந்த பணியின் ஒரு பகுதியாக கடந்த வாரத்தில் ஆலாம்பாளையம் செல்லும் சாலையில் தூண்கள் அமமைப்பதற்கான பள்ளம் வெட்டப்பட்ட நிலையில் இன்று காலை பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சாலையில் பள்ளம் தோண்டும் பணியை நெடுஞ்சாலை ஊழியர்கள் செய்து வருகின்றனர். இரண்டு வருடங்களுக்குள் இந்த பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது