பள்ளிபாளையம் தனியார் பள்ளியில் ஓவியப்போட்டி நடைபெற்றது
ஜனவரி 15
![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/01/IMG-20220115-WA0036-1024x576.jpg)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பென்டகன் ஆர்ட் கேலரி ஓவியக் குழு சார்பில் ராம் ஆர்ட்ஸ் ஒருங்கிணைப்பில் பள்ளிபாளையம் பெருமாள் மலை பகுதி அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி கட்டிடத்தில் நேற்று ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 40-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் 8 முதல் 13 வயது வரையிலும், 13 லிருந்து 18 வயது வரை என இரண்டு பிரிவில் ஓவியப்போட்டி நடைபெற்றது. ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுடைய ஓவியத் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப் படுத்தப் பட்டது. ஓவியப் போட்டியில் சாதிக்கத் துடிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு அவர்களது ஓவிய திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.