இராசிபுரம் மாணவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இரண்டாம் பரிசு
இராசிபுரம்,நவ.25..
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 15 தமிழ்நாடு என்சிசி பட்டாலியன் சார்பில் கமாண்டிங் ஆபிசர் அனில் வர்மா தலைமையில் நடைபெற்றது.
வருடாந்திர தேசிய மாணவர் படை முகாமில் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு கல்லூரிகளில் இருந்து என்சிசி மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களில் இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை பயிலும் மாணவர்கள் வி.யோகேஸ்வரன் எஸ்.சுகுணா ஆகியோர் சிறந்த என்சிசி மாணவர்களாக தேர்வு செய்யபட்டனர். மேலும் இரண்டாமாண்டு அரசியல் அறிவியல் துறை பயிலும் மாணவி எம்.யாழினி துப்பாக்கி சுடும் பயிற்சியில் இரண்டாம் இடம் பெற்று பதக்கங்களை பெற்றனர். இவர்களை கல்லூரி முதல்வர் முனைவர். சீ.மணிமேகலை பாராட்டி பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் என்சிசி அதிகாரி மேஜர் இரா.சிவக்குமார் வரலாற்று துறைத்தலைவர் முனைவர் சி.நாகூர் செல்வம் என்சிசி மாணவர்களின் தலைவர்கள் ஜீவன் சித்தார்த் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.