இராசிபுரம்;ஜன,19_

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் சந்தோஷ் லிமிடெட் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்நிலையில் அந்த தொழிற்சாலை சட்டத்திற்கு புறம்பாக கிராமநத்தம், கோவில் இடம், நீர் வழித்தடம் ஆகிய இடங்களில் கட்டிடங்கள் கட்டி பயன் படுத்தப்படுவதாக மங்களபுரம் கிராம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்திருந்தனர்.மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர்,என தொடர் கோரிக்கை மனு கொடுத்த நிலையில் கடந்த மாதம் ஊர் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.எனவே இதனை அடுத்து (19.01.2023) இன்று காலை 10 மணி அளவில் தாசில்தார்,வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு நில அளவையர் , கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மங்களபுரம் காவல் துறையினர் என அனைவரும் பிரச்சினைக்குரிய இடத்தை பார்வையிட்டனர்.தொடர்த்து அது அரசு நிலம், மற்றும் நீர் வழி பாதை என்று உறுதியானது.எனவே இராசிபுரம் வட்டாட்சியர் தலைமையில் ஜேசிபி கொண்டு தொழிற்சாலை ஆக்ரமிப்பு செய்துகட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை அப்புறப்படுத்த பட்டு வருகிறது.மேலும் தொழிற்சாலையில் ஆக்ரமிப்பு அகற்றப்படுவதை அப்பகுதி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து வருவதால் அப்பகுதியில் காலை முதல் பரபரப்புடன் காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *