இராசிபுரம்;ஜன,14-
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் சந்தோஷ் லிமிடெட் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.தொடர்ந்து இந்த தொழிற்சாலை மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது என்று பொதுமக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.இதனைஅடுத்து அரசு சார்பில் இந்த ஆலையை பிரச்சினை முடியும் வரை திறக்க கூடாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதனை அடுத்து இந்த தொழிற்சாலை அரசின் அறிவிப்பை மீறி இன்று செயல்பட தொடங்கியது.எனவே இதனை அடுத்து மங்களபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் தொழிற்சாலை செயல்பட கூடாது என்று இன்று காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.பிறகு இது குறித்து வட்டாட்சியர் மற்றும் மங்களபுரம் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
உலகம்
காய் மற்றும் கனிகளின் தாது சத்துக்கள்
சிறப்பு தொகுப்புகள்
சுற்றுலாத்தலங்கள்
சேலம் செய்திகள்
தமிழகம்
தொண்டு நிறுவனங்கள்
நாமக்கல் செய்திகள்
நாளை
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்