இராசிபுரம்; செப்,30
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தில் சந்தோஷ் லிமிடெட் தொழிற்சாலை கடந்த 300 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாடு இல்லை, அரசு விதிமுறை படி தொழிற்சாலைநடக்கவில்லை, இதனால்தண்ணீர், காற்று மாசுபாடு ஏற்படுகிறது.என கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பல முறை அரசுக்கு மனு கொடுக்க பட்டது. இதனை தொடர்ந்து அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க பட்டு தொழிற்சாலை இயங்காமல் மூடப்பட்டது.இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையில் சந்தோஷ் தொழிற்சாலையில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் குணசேகரன் தலைமையில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இந்த தொழிற்சாலை அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும்கால்நடை விலக்குகள் போன்ற ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *