இராசிபுரம்:நவ,17-
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல் பட்டு வருகிறது.இங்கு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு நேற்று பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி விஜயகுமாரி தலைமையில் மாற்று திறனாளி மாணவர்களின் சமுதாய உயர்வு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பதாகைகள் கையில் ஏந்திய படி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.இதற்கு மங்களபுரம் காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *