இராசிபுரம்:நவ,20-

கடந்த 15 ஆம் தேதி பிஜேபி சார்பில் திமுக அரசைக் கண்டித்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம்முடிந்த பிறகு மங்களபுரம் அம்பேத்கர் நகரில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீர் மற்றும் மழைநீர் தேங்கி இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் செய்தார்.அதனை அடுத்து பிஜேபி ஒன்றிய தலைவர் சிவகுமார் மற்றும் மாநில நலத்திட்ட துணை தலைவர் லோகேந்திரன் ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டு சாக்கடை நீர் வெளியேற அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அதன் மறுநாளே பிஜேபி கட்சியின் கோரிக்கையை ஏற்று பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அம்பேத்கர் நகர் பகுதியில் சாக்கடை நீர் தேங்கும் பகுதி சுத்தம் செய்ய பட்டது. தொடர்ந்து இன்று 20.11.2022 பிஜேபி கட்சியினர் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் பிரச்சினைகுறிய இடத்தை பார்வையிட்டனர். இதில்முன்னாள் ஒன்றிய தலைவர் பாஸ்கர்,ஒன்றிய தலைவர் சிவகுமார், ஒன்றிய பொதுச்செயலாளர் பிரகாசம், ஒன்றிய துணை தலைவர்கள் கன்னன், செல்வகுமார் ,கோவிந்தராஜ் மாவட்ட விவசாய அணி மாவட்ட தலைவர் தியாகராஜன்ஆகியோர் தவிர பாஜாக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து மங்களபுரம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அம்பேத்கர் நகர் கழிவுநீர் தேங்கும் இடத்தை விரைவில் சரி செய்வதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *