![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2023/08/IMG_20230831_123106-scaled.jpg)
இராசிபுரம்; ஆக,31-
மங்களபுரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டீ சர்ட் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இப்பகுதியில் ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல சேவைகளை செய்து வருகிறது.தொடர்ந்து இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு விளையாட்டு துறை மாணவர்களுக்கு ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை சார்பில் டீசர்ட்( 31.08.2023 ) (வியாழக்கிழமை)வழங்கப்பட்டது. இதில் அருள்முருகன் அறக்கட்டளை மாநிலத் தலைவர் எம் .எஸ் .அருள் மற்றும் மாநில துணை செயலாளர் சரவணன் மாநில துணை தலைவர்பிரபு மற்றும் விடியலை நோக்கி அறக்கட்டளை மாநிலத் தலைவர் மா.வீரமணிகண்டன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாச ராகவன் , உடற்கல்வி ஆசிரியர்கள் முருகன்,செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.