நாமக்கல்லில், வெல்டிங் வைக்கும்போது, லாரி டேங்கர் வெடித்ததில், பட்டறை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். பண்ருட்டியை சேர்ந்தவர் பெரியசாமி முதலைப்பட்டியில் வசித்து வரும் அவர், 15 ஆண்டுகளாக, நாமக்கல்-சேலம் சாலை, பொன்நகரில், ‘மாருதி டேங்கர் லேபர் ஒர்க்ஸ்’ என்ற பெயரில், பட்டறை நடத்தி வந்தார்.இந்நிலையில், இன்று மாலை, 5:30 மணிக்கு, பெட்ரோல் நிரப்பி செல்லும் டேங்கர் லாரி ஒன்று, பழுதை சரி செய்வதற்காக, பெரியசாமி பட்டறைக்கு வந்தது. காலியாக இருந்த டேங்கரில், கசிவு ஓட்டையை அடைப்பதற்காக வெல்டிங் வைக்க முயற்சித்துள்ளார். அப்போது, டேங்கரில் ஏற்கெனவே சிறிய அளவில் இருந்த பெட்ரோல் தீப்பிழம்பாகி வெடித்து சிதறியது. இந்த விபத்தில், துாக்கிவீசப்பட்ட பெரியசாமி, படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த, நாமக்கல் தீயணைப்பு படையினர், டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் பொன்நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *