நாமக்கல்லில், வெல்டிங் வைக்கும்போது, லாரி டேங்கர் வெடித்ததில், பட்டறை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். பண்ருட்டியை சேர்ந்தவர் பெரியசாமி முதலைப்பட்டியில் வசித்து வரும் அவர், 15 ஆண்டுகளாக, நாமக்கல்-சேலம் சாலை, பொன்நகரில், ‘மாருதி டேங்கர் லேபர் ஒர்க்ஸ்’ என்ற பெயரில், பட்டறை நடத்தி வந்தார்.இந்நிலையில், இன்று மாலை, 5:30 மணிக்கு, பெட்ரோல் நிரப்பி செல்லும் டேங்கர் லாரி ஒன்று, பழுதை சரி செய்வதற்காக, பெரியசாமி பட்டறைக்கு வந்தது. காலியாக இருந்த டேங்கரில், கசிவு ஓட்டையை அடைப்பதற்காக வெல்டிங் வைக்க முயற்சித்துள்ளார். அப்போது, டேங்கரில் ஏற்கெனவே சிறிய அளவில் இருந்த பெட்ரோல் தீப்பிழம்பாகி வெடித்து சிதறியது. இந்த விபத்தில், துாக்கிவீசப்பட்ட பெரியசாமி, படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த, நாமக்கல் தீயணைப்பு படையினர், டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் பொன்நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்லில் டேங்கர் லாரி வெடித்ததில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாப பலி
Byadmin_vidiyalainokki
Oct 11, 2021![](https://vidiyalainokki.com/wp-content/uploads/2021/10/a43ad52b-0a76-4fd7-ab54-874b551e107e.jpg)
Related Post
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
கல்வி
சிறப்பு தொகுப்புகள்
சேலம் செய்திகள்
டெங்கு
தமிழக அரசு
தமிழகம்
நாமக்கல் செய்திகள்
நாளை
நிகழ்வுகள்
நெடுஞ்சாலை துறை
புகைப்பட செய்திகள்
பொதுமக்கள் பிரச்சினை
முகப்பு பக்கம்
விபத்து
மங்களபுரம் பகுதியில்வேகத்தடை அமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை
Mar 30, 2024
admin_vidiyalainokki
அரசு அறிவிப்புகள்
அறிவியல் & தொழில்நுட்பம்
ஆன்மீக தலங்கள்
ஆன்மீகம்
இந்தியா
இன்று
சிறப்பு தொகுப்புகள்
சேலம் செய்திகள்
தமிழகம்
தொண்டு நிறுவனங்கள்
நாமக்கல் செய்திகள்
நாளை
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்
வரலாற்று தகவல்கள்
இராசிபுரம் பகுதியில் ஸ்ரீஅருள் முருகன் அறக்கட்டளை சார்பில் கோவில் திருவிழாவிற்கு தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக நன்கொடை..
Feb 24, 2024
admin_vidiyalainokki