இராசிபுரம்;டிச,30_
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட தாண்டாகவுண்டம் பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஒன்றிய செயலாளர் எம்.ஜி.சூர்யா தலைமையில் கோரிக்கை மனு பஞ்சாயத்து தலைவரிடம் கொடுக்கப் பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு.
தாண்டாகவுண்டம் பாளையத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.அதிக அளவில் மக்கள் தொகையும் உள்ளது.இளைஞர்கள் பலர் உள்ளனர்.எனவே அங்கு ஒரு உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் பிஜேபி கட்சியின் மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் கே.பாஸ்கர், கட்சி ஒன்றிய தலைவர் சிவகுமார்,துணை தலைவர்கண்ணன், அழகேசன்,முந்நாள் இராணுவ அணி பிரிவு தலைவர் பலராமன், ஒன்றிய விவசாய அணி தலைவர் செல்வகுமார், ஒன்றிய நலத்திட்ட துணை தலைவர் எம்.சுப்ரணி, ஒன்றிய மகளிர் அணி தலைவர் எம்.கோமதி, துணை தலைவர் எஸ்.சாந்தி ஆகியோர் உட்பட கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *