இராசிபுரம்:ஜன,3-
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுகா பகுதியில் அனைத்து இடங்களிலும் விவசாய நிலங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் மகசூல் செய்யப்படுகிறது.இதனை தொடர்ந்து என்.கே எனும் தனியார் நிறுவனம் மூலம் பல இடங்களில் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் அறுவடை மற்றும் பூச்சிகள் தாக்கம், சாகுபடி இரட்டிப்பாகுதல் குறித்து பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.இதனை அடுத்து இன்று ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஆயில் பட்டி நாவல் பட்டி காட்டூர் பஞ்சாயத்தில் என். கே நிறுவனம் சார்பில் மக்காச்சோளத்தில் வருமானம் அதிகம் ஈட்டவும் நோய் தாக்கத்திலிருந்து அதிகமாக மகசூல் பெறுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இதில் பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் ஒன்றிய விவசாயி அணி தலைவர் கே.செல்வகுமார்மற்றும் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட திட்ட குழு பொறுப்பாளர் அருள்மற்றும் உறுப்பினர்கள் தவிர அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2023/01/IMG-20230103-WA0073.jpg)