Category: மருத்துவமனை

*வாழ்க்கையில் ஒன்று சேரமுடியவில்லை… திருமணமான இளம்பெண் முன்னாள் காதலனுடன் தற்கொலை*

சிக்பள்ளாப்பூர்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா தொட்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா (வயது 19). அதே கிராமத்தை சேர்ந்தவர் வேணு (21). இவர்கள் 2 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவர்களின் காதல் விவகாரம் அனுஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அனுஷா, வேணுவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனுஷாவை வேறுவொரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த திருமணத்தில் அனுஷாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆடி மாதத்தையொட்டி அனுஷா பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது காதலனை சந்தித்த அனுஷா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதை காதலனிடம் கூறினார். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து 2 பேரும் தொட்டபள்ளி கிராமத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதை பார்த்த கிராம மக்கள் கெஞ்சர்லஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாழ்க்கையில் 2 பேரும் சேர முடியவில்லை என்பதால், ஒன்றாக குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கெஞ்சர்லஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

400 கி.மீ. பயணித்து ரத்த தானம்: இளம்பெண் உயிரை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு

400 கி.மீ. பயணித்து ரத்த தானம்: இளம்பெண் உயிரை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில்…

துறையூர் ஆத்தூர் சாலையில் சத்ய நாராயண சிட்டி அருகே கிருஷ்ணா பேருந்து விபத்து.

துறையூர் அருகே தம்மம்பட்டி சாலையில் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சமீபத்தில் வந்த பஸ் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நினைத்த…

நாமக்கல் மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் சார்பாக நான்காம் ஆண்டு கல்வி கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நாமக்கல்; செப்,20- நாமக்கல் மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் சார்பாக நான்காம் ஆண்டு கல்வி கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

கொல்லிமலையில் கரடி கடித்து விவசாயிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக கொல்லிமலை வழங்குகிறது… இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்… இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால்…

ராசிபுரம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது பிரேக் கட்டாகி, 100 அடி கிணற்றில் தவறி பள்ளி மாணவர்கள்

ராசிபுரம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது பிரேக் கட்டாகி, 100 அடி கிணற்றில் தவறி விழுந்த 3 மாணவர்கள்… காப்பாற்ற குதித்த மாணவனின் தந்தை மற்றும் மாணவன்…

மங்களபுரத்தில் விலையுயர்ந்த அரசு மாத்திரைகள் குவியல் குவியலாக சுடுகாட்டில் கொட்டி எரிப்பு…

50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மங்களபுரம் அரசு மருத்துவமனையே நம்பி உள்ள நிலையில்இங்கு பணி புரியும் அரசு மருத்துவர்கள் கிளினிக் என்ற பெயரில் தனியாக மருத்துவமனை நடத்துவதால்…

ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் மையங்களுக்கு மீண்டும் சீல் வைப்பு

ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு தமிழக அரசு கடந்த மாதம் 15-ந்தேதி சீல் வைத்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு…

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். கருமுட்டை விற்பனை ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம்…

சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் சுதா ஹாஸ்பிடல் 5 ஸ்கேன் மெஷினுக்கு சீல் வைப்பு

ஈரோடு:ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் பெற்றோரே, பெண் புரோக்கர் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை…