பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஸ்ரீ குண்டத்து ஓங்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

ஜனவரி-6

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குண்டத்து ஓங்காளியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு பூ மிதித்தனர். மேலும் 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் அலகு குத்துதல், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ,சக்தி அழைத்தல், வானவேடிக்கை,, அம்மன் திருவீதி, உலா பொங்கல் விசேஷ பூஜைகள், மாவிளக்கு ஊர்வலம் ,ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று இறுதியாக வழுக்கு மரம் ஏறும் விளையாட்டுப் போட்டி நடைபெற்று திருவிழா முடிவடையும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *