![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/09/IMG-20220917-WA0035-300x263.jpg)
தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – மீன்வளத்துறை ஆணையரிடம் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் அவர்கள் இன்று சென்னையில் உள்ள மீன்வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் திரு.கே.எஸ் பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் குமரி மாவட்ட மீனவர்களின் பல்வேறு தேவைகள் குறித்தும் ஆணையரிடம் எடுத்து கூறினர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த் அவர்கள்