![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/09/IMG-20220822-WA0050-300x166.jpg)
தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாநில எல்லை விவகாரங்கள், நதிநீர் பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.