நவம்பர் 18-
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெடியரசம்பாளையம் நவக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். திருப்பூரில் கடந்த சில வருடங்களாக சொந்தமாக தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த கார்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தை வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு பள்ளிபாளையம் புதிய பாலத்திற்கு வந்துள்ளார். வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்திலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.பாலத்தில் இரு சக்கர வாகனம் நிற்பதை அடிப்படையாக வைத்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை பள்ளிப்பாளையம் ஓடபள்ளி கதவணை பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் வரவே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஞாயிற்றுக்கிழமை அன்று காணாமல் போன கார்த்தியின் உடல் என்பதை உறுதிசெய்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கார்த்தியின் உடலை வைத்துள்ளனர். இந்த நிகழ்வால் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.