புதுச்சத்திரம் ஒன்றியம் ஏழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் செல்வன் ம.கிஷோர் மாநில அளவில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசின் பள்ளி கல்விதுறை சார்பாக துபாய் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்கிறார்.
மாணவன் ம.கிஷோர் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். நிகழ்வில் (ஏழூர்) ஒன்றிய கவுன்சிலர் துகில் .வை. கண்ணன் , துரை முருகன் , அருள் முருகன் மற்றம் ம.கிரண் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்…